Monday, October 22, 2007

மடம்

என்னைத் தொலைக்க சென்றால் -
செருப்பைத் தொலைக்காதே! என்று நுழைவாசல் எச்சரிக்கை,
காலம் கடக்கும் சிந்தனைச் சாரம் -
கடிகாரம் காட்டும் இடைவெளியில் மட்டுமே "விற்பனைக்கு".
துறவிகள் குடியிருப்பில் -
அனுமதியில்லை அறிவிப்பு, இருவர்ண நிலைப்பாடு.
பரமஹம்சர் சன்னதிக்குள் -
செல்போன் மௌனம், கம்பிக்கூண்டில் மூவர் கைது.
பெரியவரே, சிறைப்பட்டிருக்கிறது உங்கள் வெளிப்பாடெல்லாம், விடுவித்துக்கொள்ளும்.
என் சுதந்திரம்? விட்டுத்தள்ளும் அது என் பாடு.