Tuesday, October 28, 2008

வாழ்த்து மடல்

செய்தி ஒன்றுமில்லை, இணயத்திலும் காணவில்லை,
ஆனால் காலம் அருகில் என்றறிவேன்.
என் மனத்திரையில் ஏனோ ஒரு பதட்டம்,
உன் கணவன் கைப்பிசைகிறான்,
உள்ளிருந்து உன் அலறல் கேட்கிறது.
கொல்லத்துடிக்கிறாய் நீ, நானும் தான் அவனை.
ஆனால் நாளை எங்கள் சந்தோஷத்தருணங்களின் பரிசென்பாய்.
நடக்கட்டும், இதோ! உன் உயிர் ஊற்றி இன்னொரு வரம் பூமிக்கு
உன் மருப்பிறப்பு!
மனமுவந்து வாழ்த்துகிறேன்.
என்னிடம் உன் குழந்தைக்கு தர ஒன்றுமில்லை
சுதந்திர சிந்தனையைத் தவிர!